tamilnadu

img

34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்: ஆவின் சாதனை

சென்னை, மே 9- சென்னையில் ஆவின் நிறுவனம் 34 லட்சம்  லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் சாத னைப் படைத்துள்ளது. இதுதொடர்பாக, ஆவின் மேலாண்மை இயக்குநர் மா. வள்ளலார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்று  காலத்திலும் மக்களுக்கான சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆவின் நிறுவ னத்திற்கு தமிழ்நாட்டில் 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் இருக் கின்றன. அவற்றின் மூலம்  நாளொன்றுக்குச் சராசரியாக 28.50 லட்சம் லிட்டர் பால் கொள் முதல் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கு தல் காரணமாக தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதல் அளவு, பால் விலையைக் குறைத்து விட்டனர். இதனால் பால் உற்பத்தி யாளர்கள் சிக்கலில் தவித்தனர். இதனையடுத்து,  அவர்களுக்கு உதவும் வகையில் 100 புதிய பால்  கூட்டுறவுச் சங்கங்கள், 378 பால் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன. அதன் மூலம் 12,800 புதிய உறுப்பினர்க ளைப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அமைப்புக்குள் கொண்டு வந்தது ஆவின் நிர்வாகம். இதனால் படிப்படியாக ஆவின் பால்  கொள்முதல் அதிகரித்தது. இதனால், ஆவின் சாதனையில் மற்றொரு மைல்கல்லாக நேற்று 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மூலம் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.