tamilnadu

img

கடலூர், நாகை மாவட்டத்தில் பெட்ரோ ரசாயன மண்டலம் ரத்து

தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை,பிப்.22- தமிழக அரசு கொண்டு வந் துள்ள வேளாண் பாதுகாப்பு மண் டல மசோதா சனிக்கிழமை (பிப்.22) அதிகாரப்பூர்வமாக தமிழக அரசி தழில் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சிய மாக திகழும் காவிரி டெல்டா பகுதி களை பாதுகாப்பதற்காக, “பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலம்” ஆக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி சமீபத்தில் அறிவித்தார்.  காவிரி வேளாண் பாதுகாப்பு  மண்டலத்தை உறுதிப்படுத்துவ தற்காக கடந்த வியாழனன்று சட்ட சபையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதி களாக வருகின்றன என்ற விவரம்  தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும்  தமிழ்நாடு பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலம் அமைப்பு  என்ற பெயரில் ஒரு அதிகார  அமைப்பும் உருவாக்கப் பட்டுள்ளது.

இது தவிர பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் சட்டத்தை மீறி  தொழில் தொடங்கினால் தண்  டனை வழங்குவதற்கும் சட்ட  மசோதாவில் வழிவகை செய்யப் பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக  அரசு கொண்டுவந்துள்ள வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா  அதிகாரப்பூர்வமாக தமிழக அரசித ழில் வெளியிடப்பட்டது. அதோடு நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்தும் அரசிதழில் அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக  வீட்டு வசதி ஊரக மேம்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை வருமாறு:-

நாகை மற்றும் கடலூர் மாவட்  டங்களில் உள்ள 45 கிராமங்க ளில், “பெட்ரோலியம், ரசாயனம்  மற்றும் பெட்ரோலிய ரசாயன முத லீட்டு மண்டலம்” அமைப்பதற்கு தமிழ்நாடு நகர மற்றும் திட்ட சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப் பட்டு இருந்தது. அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என டெல்டா பாசன பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர். பொதுமக்க ளின் வேண்டுகோளை ஏற்று பெட்ரோலியம்- ரசாயன மண்டலம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. கடலூர், நாகை மாவட்ட ஆட்சியர்கள் இந்த அனுமதி ரத்து நடவடிக் கையை மேற்கொள்ள அறிவு றுத்தப்பட்டுள்ளனர். இது தொடர் பான தகவல்களை அரசுக்கு தெரி விக்கவும் அவர்களுக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதி களை பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாக அறிவித்து சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து  அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.