tamilnadu

img

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் 4 கிலோ அரிசி வீதம் 400 கிலோ அரிசி வழங்கப்பட்டது

ஊரடங்கின் காரணமாக காஞ்சிபுரத்தில் பல்லாயிரக்கணக்கான நெசவாளிகள் வேலையில்லாமல் முடங்கி உள்ளனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில்,  நெசவாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர் நிறைந்த காஞ்சிபுரம் பெருநகராட்சி 16 வது வட்டம் பிள்ளையார்பாளையம் பகுதியில்100 குடும்பங்களுக்கு 4 கிலோ அரிசி வீதம் 400 கிலோ அரிசி மற்றும் கத்திரிக்காய் சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் தலைமையில் சிஐடியு கைத்தறி சங்க நிர்வாகிகள் மாணிக்கம், வெற்றிவேல், சூரிய பாரதி,நாகவேல் மற்றும் பலர் வீடு வீடாகச் சென்று வழங்கினர்.