tamilnadu

img

உப்புநீரை வெளியேற்றி தடுப்பணை: அதிகாரிகள் உறுதி

சிதம்பரம், ஜூன் 19- பக்கிங்காம் கால்வாயில் உப்பு நீர் உட்புகுந்து விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால், அந்த நீரை  வெளியேற்றி நிரந்தர தடுப்பு கத வணை கட்டித்தரக் கோரி சிதம்ப ரம் பொதுப்பணித் துறை அலுவ லகத்தை ஜூன் 17ஆம் தேதி முற்று கையிட்டு போராட்டம் நடத்துவதாக  விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு திமுக  தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவிந்திரன் தலைமை தாங்கு வார் என்றும் சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எஸ். ஜி.ரமேஷ்பாபு, தமிழ்நாடு  விவசாயிகள் சங்க துனணத் தலைவர்  கற்பனைச் செல்வம் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய், பொதுப்  பணித் துறை அதிகாரிகள் கடந்த 15 ஆம் தேதி வட்டாட்சியர் அலுவல கத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப் பட்ட இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளிடம் உப்புநீரை வெளியேற்றி டவும், தடுப்  பணை கட்ட திட்ட அனுமதி அனுப்ப வும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி  அளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.