சென்னை, செப்.26- ரூபாய் 109 கோடி ரூபாய் மதிப்பிலான 370 புதிய பேருந்து களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செய லக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து பேருந்துகள் இயக்கத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் கோவை கோட்டத்துக்கு 104 பேருந்து களும், அரசு விரைவு போக்கு வரத்து கழகத்திற்கு 65, சேலத்திற்கு 57, கும்பகோணத் திற்கு 41, மாநகர போக்கு வரத்துக் கழகத்திற்கு 30 , விழுப்பு ரம் கோட்டத்துக்கு 27 , நெல்லைக்கு 26, மதுரைக்கு 20 பேருந்துகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல் வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.