tamilnadu

img

ஆறுகளில் சாயக்கழிவுகளை கலந்தால் கடும் நடவடிக்கை

அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை

கோபி, ஜூலை 4- ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க அதிகாரிகள் ரோந்து சென்று நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்று சுற்றுசூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கவுந்தபாடியில் 42 வணிகர்களுக்கு சிறுவணிகக் கடனுதவி களை வழங்கிய சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் தெரி வித்ததாவது, கொரோனா பாதிப்பு காரண மாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் வணிக கடன், நகைக் கடன் உள்ளிட்டவைகள் வழங்கப் பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மக்கள் நம்மை நாமே பாகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், சாயக்கழிவுகள் ஆறுகளில் கலப் பதை தடுக்க அதிகாரிகள் இரவு, பகல் என  அனைத்து நேரங்களிலும் ரோந்து சென்று  ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு  வருகின்றனர். அதனால் 99 சதவிகித சாய கழிவுகள் ஆற்றில் கலப்பது தடுக்கப் பட்டுள்ளது. கழிவுகள் ஆற்றில் கலப்பது தெரிந்தால் நான்கு மணிநேரத்திற்குள் அந்த சாய ஆலை மூடப்படும் என தெரிவித்தார்.