tamilnadu

img

10,11, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதியை அறிவித்தார் அமைச்சர்

சென்னை,பிப்.28- 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல்  24 ஆம் தேதியும், 10 ஆம்வகுப்பு தேர்வு முடிவுகள் மே 4 ஆம் தேதி யும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு கள் மே 14 ஆம் தேதியும் வெளி யிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் முதலி பாளைய அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்போது கூடுதல் கட்டி டங்கள் கட்டப்பட்டுள்ளது. அதன்  திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த அவர்,“இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடக்கிறது. 10 ஆம் வகுப்பு தேர்வு கள் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி  ஏப்ரல் 13 ஆம்தேதி முடிவடை கிறது” என்றார்.

11 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச்  26 ஆம் தேதி வரை நடக்கிறது.  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக் கான முடிவுகள் ஏப்ரல் 24 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு தேர்வு  முடிவுகள் மே 4 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  மே 14 ஆம் தேதியும் வெளியிடப்ப டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்தி லிருந்து 3 மணி நேரமாக உயர்த்தப்  பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும். முதல் 15 நிமிடங்கள் மாணவர்கள் கேள்வித்தாளை படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்  தில் மாணவர்கள் கேள்வித் தாளை நன்றாக படித்து பார்த்து விடை எழுத வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வை மாநிலம் முழு வதும் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுத உள்ளனர். இதே போல் 10 ஆம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 பேரும், 11 ஆம் வகுப்பு தேர்வை  8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேரும்  எழுத உள்ளனர். கடந்த ஆண்  டைக் காட்டிலும் இந்த ஆண்டு  தேர்வு மையங்கள் அதிகப்படுத்த பட்டு 3 ஆயிரத்து 12 தேர்வு  மையங்கள் உருவாக்கப் பட்டுள்ளதாவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.