tamilnadu

img

விழுப்புரத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

விழுப்புரம், ஏப்.5- விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு மருத்துவப் பணியாளர்கள் ஊக்கத்துடன் பணியாற்றுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இரண்டாவது மணி விழுப்புரம் மாவட்டமாகும். இதனையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் சனிக்கிழமை இரவு 8.15 மணிக்கு ஆய்வு செய்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களை சந்தித்தவர், அவர்களை ஊக்கப்படுத்தி சென்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா மருத்துவ ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கிறது” என்றார்.