கொரோனா தொற்றை திறம்பட எதிர் கொண்டு வருவதை உலகிற்கே வழிகாட்டி வருகிறது கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பெருமிதத்துடன் கூறினார். முகநூல் நேரலை ஒளிபரப்பு வாயிலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு நடத்தி வரும் உரைத்தொடரின் 103வது நிகழ்வில் புத னன்று (ஜூலை 15) மாலை கட்சியின் அரசியல் தலைமை க்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசியது வருமாறு: உலகம் முழுவதுமே கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரை எதிர்கொண்டுள்ள இந்தக் குறிப்பிட்ட சூழலில் நாம் மக்கள் உரிமைகள் பற்றிப் பேசுகிறோம். இறந்த வர்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் – அதுதான் அமெரிக்கா. பெரும்பாலான நாடுகள் பல்வேறு வகைகளில் ஊரடங்குப் பிரச்சனை களைச் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன. இதில் மூன்று அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். முதலாவது உலகளாவிய பெருந்தொற்று அனுபவம். இரண்டாவது உலகளாவிய துயரம். மூன்றாவதாக இவற்றில் உள்ள ஒரு பொதுத்தன்மை.
மூன்று நாடுகள்
உலகில் கொரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உள்ள அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் வலதுசாரி அரசாங்கங்கள்தான் இருக்கின் றன. இந்த மூன்று நாடுகளிலும் உள்ள அரசு அமைப்பை யும், அரசுகளின் தலைமைகள் பின்பற்றும் கொள்கை களையும் பார்க்கிறபோது இந்த நாடுகளின் மக்கள் அனுபவிக்கும் பெருந்துயரம் தற்செயலானதல்ல. அது ஏன் என்று புரிந்துகொண்டாக வேண்டும். இந்த மூன்று நாடுகளின் மக்கள் எதிர்கொண்டுள்ள மோசமான பாகுபாடுகளுக்குக் காரணமாக இருப்பது அரசு அமைப்புகள்தான். ஒரு பக்கத்தில் மிக முன் னேறிய முதலாளித்துவ நாடுகளும். வளரும் நாடு களுக்கிடையே மிக முன்னேறிய நாடாக இந்தியாவும் இருக்கின்றன. வளரும் நாடுகளில் பொருளாதாரத்தில் மிக முன்னேறிய நாடு என்று சொல்வதற்கு திருவாளர் மோடி சளைப்பதே இல்லை. இன்னொரு பக்கத்தில் சோசலிச நாடுகள் இருக்கின்றன.
முதலாளித்துவ நாடுகளை விட, சோசலிச நாடுகளொன்றில் பிறந்த மக்கள் இந்த நோயை வென்று, பெருந்தொற்றுப் பேரிடரை சமாளித்துத் தாக்குப் பிடித்து வாழ்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆக ஒரு நாட்டின் பொருளாதார அமைப்பு என்ன என்பது முக்கியமாகிறது. ஏராளமான மக்கள் வாழ்ந்து கொண்டி ருப்பதிலும், உயிரிழப்பதிலும் முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்திற்குமான வேறுபாடு முக்கியப் பங்காற்றுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பெருந் தொற்று கையாளப்பட்டது பற்றிய தகவல்கள் நினை வுக்கு வருகின்றன. முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ஸ்பானிஷ் ஃபுளூ என்ற கொடுமையான தொற்று பரவியது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில்தான் அது உருவானது என்றாலும் அதற்கு ‘ஸ்பானிஷ்’ பெயர் சூட்டப்பட்டது. லட்சக்கணக்கான உயிர்களை ஸ்பானிஷ் ஃபுளூ காவுகொண்டது.
பெருந்தொற்றை வெற்றி கொண்ட லெனின்
அதே காலக்கட்டத்தில் தான் உலகின் முதல் உழைப்பாளி வர்க்க அரசாக சோவியத் யூனியன் உருவாகியிருந்தது. தோழர் லெனின் தலைமையில் நடைபெற்ற போல்ஷ்விக் ஆட்சி பெருந்தொற்றுப் பேரிடரைக் கையாள திட்டமிட்ட முறையிலான பொது சுகாதாரக் கொள்கையும் தேவையென்று உலகத்திற்கு எடுத்துக்காட்டியது. அரசின் தலையீட்டில், உலகின் முதலாவது பொது சுகாதாரக் கட்டமைப்பு உலகத்திற்கே ஒரு முன்னுதாரணமாக ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பெருந்தொற்று சவால் வெற்றிகொள்ளப்பட்டது. ஆனால் இன்றைக்கு எதையும்தனியார்மயமாக்கு, அரசாங்கப்பொறுப்பிலிருந்து பின்வாங்கு, சந்தை, எல்லாவற்றிற்கும் சந்தை, இதுதான் பல நாடுகளின் ஆட்சியாளர்களின் மந்திரமாக உச்சரிக்கப்பட்டு வருகிறது. இதுதான் மக்களின் வாழ்க்கையை, பொது சுகாதார அமைப்பைத் தூக்கியெறிந்தது.
இந்தியாவில்...
அமெரிக்காவிலும் இதர ஐரோப்பிய நாடுகளி லும் மிகச்சிறந்த அறிவியல் சாதனைகள் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன. ஆனால் அவர்களால் மக்களைக் காக்க முடியவில்லை. இந்தியாவில் மக்களின் உரிமைகள் பற்றி நாம் பேசுகிறபோது உயிர்வாழும் உரிமைதான் முதன்மையாகிறது. அதைப் பற்றிப் பேசுகிறபோது, மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற இரண்டுவிதமான பொருளாதார அமைப்புகள் பற்றிப் பேசுவது முன்னுக்கு வருகிறது. முதலாளித்துவ அமை ப்பின் அப்பட்டமான தோல்வி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் கூட இதற்கான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. தோழர் பினராயி விஜயன் தலைமை யிலான கேரள அரசும், நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசும் பாஜக ஆளுகிற மாநில அரசு களும் எவ்வாறு இந்தப் பெருந்தொற்றுப் பிரச்சனை யைக் கையாளுகின்றன என்ற வேறுபாட்டைத் தெளி வாகப் பார்க்கிறோம்.மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் இடது ஜனநாயக முன்னணி அரசு வெற்றிகரமாகவும் பொறுப்புணர்வோடும் கொரோனா பிரச்சினையைக் கையாண்டதை உலகமே பாராட்டுகிறது.
கேரளத்தில் வாழக்கூடிய ஒரு அமெரிக்கரோ, ஜெர்மானியரோ “இப்போது என் நாட்டுக்குத் திரும்பிச்செல்ல விரும்பவில்லை, இங்கேதான் பாதுகாப்பாக உணர்கிறேன்,” என்று சொல்கிறார் என்றால், அது கேரள அரசு தெளிவான தொலைநோக்கோடும் கொள்கைகளோடும் பொறுப்பேற்போடும் செயல்பட்டிருப்பதைத்தான் காட்டுகிறது. இந்தியாவில் ஒரு மாநில அரசுக்கு இருக்கிற வரம்புக்குட்பட்ட உரிமைகளோடு இதைக் கேரளம் சாதித்திருக்கிறது. அதே போல கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கேரளத்தில் இடதுசாரிக் கட்சிகள் மக்களிடையே செயல்பட்டு, பொதுசுகாதார அமைப்பு பற்றிய கல்வியையும் அதை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச்சென்று வந்திருக்கிறார்கள். கடந்த பல மாதங்களாக மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வந்திருப்பது போலவே, ஒரு அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிற கூடுதல் பொறுப்போடு கேரளத்தில் பணியாற்றி வருகிறார்கள்.இவையனைத்தும் சேர்ந்துதான் உலகத்தின் சிறந்த முன்னுதாரணங்களில் ஒன்றாகக் கேரளம் திகழ்கிறது. இதை உலகமே அங்கீகரிக்கிறது. மூழ்கடிக்கப்பட்ட முதலாளித்துவ நாடுகள் கொரோனா கால ஊரடங்கு உலக நாடுகள் அனைத்திலுமே வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு வகைகளில் நடைமுறைப்பபடுத்தப்படுகிறது. இதன் பாதிப்புகள் முதலாளித்துவ நாடுகள் அனைத்தையுமே மூழ்கடித்திருக்கின்றன. உலகளாவிய பொருளாதார வளர்ச்சி விகிதம் பூஜ்யமாகத்தான் இருக்கும், வேலையின்மை மிகப்பெரிய அளவுக்கு அதிகரிக்கும், கார்ப்பரேட்டுகளின் வருவாய் விகிதம் சரிந்துவிடும் என்று உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகள் கூறுகின்றன.
இச்சூழலில் உலகில் நடைபெறுகிற பல முக்கிய மான போராட்டங்களையும் நாம் பார்த்துக்கொண்டி ருக்கிறோம். காவல்துறை சித்ரவதைகளை எதிர்த்தும், சமூகப் பொருளாதார நிலைமைகளை எதிர்த்தும் போராட்டங்கள் நடக்கின்றன. கறுப்பின மக்களின் எழுச்சி அமெரிக்காவையே கவ்வியிருக்கிறது – அது ஜனாதிபதி தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேவேளையில், லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள், முதலாளித்துவ அமைப்பின் தோல்வியால் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்டித்து, ஒரு கிரிமினல் தன்மையோடு பொதுசுகாதாரக் கட்ட மைப்பு சீர்குலைக்கப்பட்டதையும் தனியார்மய மாக்கப்பட்டதையும் எதிர்த்து மாபெரும் போராட்டங்களைநடத்தியிருக்கிறார்கள். பொருளாதார மீட்புத் திட்டங்கள் என்று சொல்லிக்கொண்டு பெரும்நிதி நிறுவனங்களுக்கும் தனியார் வங்கிகளுக்கும் பெருமளவில் நிதியுதவி செய்யப்பட்டது. இப்போது அதன் சுமைகள் அனைத்தும் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படுகின்றன. அவர்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றன, குறைந்தபட்ச ஊதிய உரிமை மறுக்கப்படுகிறது. ஓய்வூதியம் ஒழிக்கப்படுகிறது,சமூகப் பாதுகாப்பு நிராகரிக்கப்படுகிறது. இதையெல்லாம் எதிர்த்து உலகம் முழுவதுமே தொழிலாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
ரூ.20 லட்சம் கோடி போலித்தனமானது
நமது நாட்டிலும் பெருமளவுக்கு இதேபோல் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்புப் போராட்டத்தை யொட்டி, (18 நாட்களில் முடிந்த) மகாபாரதப் போர் போல இது 21 நாட்களில் முடிந்துவிடும் என்றார்கள். நான்கு மாதங்களில் இன்று என்ன நிலைமை? கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ள முதல் மூன்று நாடுகளின் வரி2சைக்கு இந்தியா வந்துவிட்டது. ஊரடங்கைப் பயன்படுத்திக்கொண்டு, பொதுமக்கள் பொதுவெளியில் கூட முடியாது, குரலெழுப்ப முடியாது என்ற நிலைமையில், குடிமக்கள் உரிமைகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பே தகர்க்கப்படுகிறது. நாட்டின் அரசமைப்பு சாசனத்தாலும், சட்ட விதிகளாலும், கடும் போராட்டங்களாலும் உருவாக்கப்பட்டதே மக்களின் அடிப்படை உரிமைகள் என்ற கட்டமைப்பு. அதனைச் சீரழிக்கிற கொள்கைகளும் நடைமுறைகளும் செயலாக்கங்களும் கிரிமினல்தனமாகத் தீவிரமான முறையில் இந்த நான்கு மாத காலத்தில் வந்துவிட்டதைப் பார்க்கிறோம்.
20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்று மத்திய அரசு அறிவித்தது எவ்வளவு போலித்தனமானது! ஒரு பிரதமர், ஒரு அரசாங்கம் இப்படித் தனது சொந்த மக்களை ஏய்க்க முடியும் என்பது எவ்வளவு வெட்கக்கேடானது! உண்மையில் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது மொத்த உள்நாட்டு உற்பத்தில் ஒரே ஒரு சதவீதம்தான். இன்னொரு பக்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஏராளமான சலுகைகள் அள்ளித்தரப்பட்டிருக்கின்றன.
நாடாளுமன்றம் கூடாத நிலைமையில், பொது மக்கள் கலந்தாலோசிப்பதற்கோ போராட்டம் நடத்து வதற்கோ வெளியே வர முடியாத சூழலில் அனைத்துப் பொதுத்துறைகளும் தனியார்மயமாக் கப்படுகின்றன, அந்நிய நேரடி முதலீடுகளுக்கு வழி திறந்துவிடப்படுகிறது. மிக முக்கியமாக, தொழிலா ளர்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப் படுகிறது. தொழிலாளர் வேலை நேரம் 12 மணி நேர மாக்கப்படும் என்று மத்திய அரசும் பல மாநில அரசு களும் சொல்கின்றன. இதையெல்லாம் அவர்கள் இந்தியாவில் உள்ள கார்ப்பரேட்டுகளுக்காக மட்டு மல்ல, உலகம் முழுதும் இருக்கிற கார்ப்பரேட்டுக ளுக்காகச் செய்கிறார்கள்.
மிகப்பெரிய புலம் பெயர்வு
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கிற நிலைமை ஏற்பட்டது. இதற்கு முன் இவ்வளவு பெரும் எண்ணிக் கையில் மக்கள் புலம்பெயர்ந்தது எப்போது தெரி யுமா – நாடு பிரிந்தபோதுதான். அப்போது 90 லட்சம் மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் புலம்பெயர்ந்தார்கள். அது வேறொரு சூழலில், பெரும் வன்முறைப் பின்னணிகளோடு நடந்தது என்றாலும், இந்தியா இதற்கு முன் பார்த்த மிகப்பெரிய புலம்பெயர்வு அதுதான். ஆனால், இன்று புலம்பெயர்ந்தவர்கள் யார்? இந்த நாட்டின் செல்வத்தை உருவாக்கியவர்கள். தொழிலாளர்க ளுடைய உரிமைகள் தகர்க்கப்படுகின்றன என் றால், குடிமக்களுடைய உரிமைகள் ஏதாவது விட்டு வைக்கப்படுமா? அப்படி எதுவுமே இல்லாமல் போய்விடும்.
ஆகவே, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது தொழிற் சங்கப் போராட்டம் அல்ல, அது நாட்டின் ஜனநாய கத்தைக் காப்பாற்றுகிற போராட்டம். இந்தியச் சூழலில் தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டம் பற்றிப் பேசுகிறபோது, தொழிலாளி வர்க் கத்திற்கு உள்ளேயே இருக்கிற சாதிப் பாகுபாடு போன்ற பிரச்சனைகளோடும் அது சம்பந்தப்படு கிறது. தலித்துகள், பழங்குடிகள் அகியோரும் பெண் தொழிலாளர்களும் ஊரடங்கால் மிக அதிமான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
ஜூலை 23, ஆகஸ்ட் 9 இயக்கங்கள்
நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்கு ஏலம் விட்டிருப்பதை எதிர்த்து அகில இந்திய நிலக்கரித் தொழிலாளர் சங்கம் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில், ஆதிவாசி தொழிலாளர் சங்கம் சார்ந்த தொழிலாளர்கள் இணைந்தார்கள். இது போல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. வங்கிகள் இணைப்பு, ஊரக வங்கிகள் மூடல் போன்றவற்றை எதிர்த்து வங்கி ஊழியர்கள் போராடுகிறார்கள் என்றால் அது அவர்களுடைய பிரச்சனைக்காக அல்ல, கிராமப்புற மக்களுக்குக் கிடைத்துவரும் வங்கிச் சேவைகள் தடையின்றித் தொடர வேண் டும் என்பதற்காகவும்தான். எல்ஐசி ஊழியர்கள் நாடு முழுவதும் மக்களிடையே சென்று மாபெரும் இயக்கம் நடத்தி, நேர்மையான, விரிவான காப்பீட்டு சேவையை உறுதிப்படுத்த அந்த நிறுவனம் தனி யார் கைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டாக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார்கள். இது போன்ற சிறந்த உதாரணங்கள் இருக்கின்றன.விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கோரிக் கைகளை முன்னெடுக்கும் போராட்டங்கள் ஜூலை 23, ஆகஸ்ட் 9 தேதிகளில் நாடு தழுவிய அளவில் வரவுள்ளன.
பிரதமரின் அதிகாரக் குவிப்பு
பிரதமர் மோடி நாடாளுமன்ற அதிகாரத்தைத் தானே எடுத்துக்கொண்டவராக, அவசரச் சட்டங்க ளைப் பிறப்பித்து ஆட்சி நடத்துகிறார். மத்திய அத்தி யாவசியப் பொருள்கள் சட்டத்தைத் திருத்த ஒரு அவ சரச் சட்டம் கொண்டுவரப்பட்டு நாட்டின் விவசாயி களைத் தாக்குகிற வகையில், விவசாயத்தை கார்ப்பரேட் சக்திகளுக்குத் திறந்துவிடுகிற நடவ டிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பேரிடர் மேலாண் மைச் சட்டத்தைப் பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாநிலங்களோடு பிரதமர் இது பற்றிக் கலந்தாலோசித்தாரா? மத்தி யிலிருந்து ஃபட்வா பிறப்பிப்பது போல ஆணைகள் வருகின்றன. கூட்டாட்சி என்பது நமது ஜனநாய கத்தின் ஒரு பகுதி இல்லையா? கொரோனா பாது காப்புக் கருவிகள் உட்பட சுகாதாரம் சார்ந்த உதவிகள் ஏதாவது மாநிலங்களுக்குச் செய்யப்படுகிறதா? மாநிலங்களுக்கு உரிய ஜிஎஸ்டி வரி வருவாய்ப் பங்கு கூட வழங்கப்படவில்லை. இதையெல்லாம் மறைக்க நினைப்பதால் புள்ளிவிவரங்களைத் தர மறுக்கிறார்கள். பிரதமர் பெயரால் ஏற்படுத்தப்பட்ட நிதியம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.
பகிரங்க குதிரை பேரம்
நாடாளுமன்ற ஜனநாயகமும் கூட்டாட்சியும் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் பிரச்சனை ஏற் பட்டிருக்கிற நிலையில் என்ன நடக்கிறது? மாநி லங்களவைத் தேர்தலில் இடங்களைப் பிடிப்ப தற்காக எம்எல்ஏக்களை விலைகொடுத்து வாங்க பாஜக பெரும்பணத்தைக் கொட்டுகிறது.குஜ ராத்தில் அதே போல் பணத்தை வீசுகிறார்கள். பலர் விலைபோகத் தயாராகவும் இருக்கிறார்கள்.
இது அரசியல் செயல்பாடுகளோடு மட்டும் நிற்க வில்லை. சட்டப்பூர்வ அமைப்புகளைச் சீர் குலைப்பது வரையில் போகிறது. அனைத்து அர சியல் கட்சிகளோடும் கலந்தாலோசித்து முடிவு களை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம், ஊர டங்கைப் பயன்படுத்திக்கொண்டு, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்குகள் அனுப்பலாம் என்று அறிவிக்கிறது. இத்தகைய ஏற்பாடுகள் மோசடிகளுக்குத்தான் பயன்படும் என்பது உலகம் முழுவதும் அறிந்த உண்மை. பீகாருக்குச் சென்ற அமித் ஷா 144 கோடி ரூபாய் செலவு செய்து கட்சிப் பிரச்சாரகர்களுக்கு ஸ்மார்ட் போன், மின்னணுத் திரை போன்றவற்றை வழங்கினார். மத்திய ஆளுங் கட்சியும் பீகார் மாநில ஆளுங்கட்சியான நிதிஷ் குமார் கட்சியும் டிஜிட்டல் பிரச்சாரம்தான் நடத்தப்பட வேண்டும் என்கின்றன. பீகார் உட்பட, நாடு முழு வதும் 90 சதவீத மக்கள் பட்டினியின் விளிம்பில் இருக்கிறபோது, ஸ்மார்ட் போன் பார்த்துப் பிரச்சா ரத்தைக் கேட்கச் சொல்வது கொடுமையில்லையா? தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது?
மிதிக்கப்படும் மனித உரிமைகள்
இத்தகைய அரசியல் நிகழ்வுகளுக்கிடையே, இந்த ஊரடங்குக் காலத்தில் சாதிய வன்மங்கள் கட்ட விழ்த்து விடப்படுகின்றன, மனித உரிமைகள் மிதிக்கப் படுகின்றன, காவல்நிலைய சித்ரவதைகள் நடக் கின்றன, பெண்கள் மீதான வன்முறைகள் அதிக ரிக்கின்றன. மக்களை மதவாத அடிப்படையில் பிரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. தமிழகத்தில் தந்தையும் மகனும் காவல்நிலையத் தாக்குதலில் உயிரிழந்ததையும், உலகம் முழுக்கக் கண்டனம் எழுந்ததையும் பார்த்தோம். மக்கள் எழுச்சியாலும், ஜனநாயக சக்திகளின் கண்டனத்தாலும், நமது கட்சித் தோழர்களின் அயராத போராட்டங்களாலும், மாநில அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஜனநாயகத்தையும் மக்கள் உரிமைகளையும் தாக்குகிற நடவடிக்கைகள் புதிதல்ல. ஆர்எஸ்எஸ்-பாஜக தலைமை மக்களைப் பிளவுபடுத்தி, தங்களது இந்துராஷ்டிர அரசியலை நிறுவுவதற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதன் தொடர்ச்சிதான் இது. குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து நடந்த போராட்டம் நாடு முழுவதும் எழுச்சியாக நடந்தது. குறிப்பாகப் பெண்கள் லட்சக்கணக்கில் பங்கேற்றார்கள். தில்லியில் அந்தப் போராட்டம் மிகக்கொடிய வன்முறையால்தான் ஒடுக்கப்பட்டது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கொடூரமாகத்தாக்கியவர்கள் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். போராடியவர்கள் மீது “நகர்ப்புற நக்சல்கள்” என்று முத்திரை குத்தி, கைது செய்து, மோசமான யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குகள் போடப்படுகின்றன. தில்லியில் அப்போது காவல்துறையினர் நடத்திய வன்முறைகளைக் காட்டுகிற வீடியோ பதிவு கள் பரவலாக வந்துள்ளன. ஆனால் அப்படிப்பட்ட ஆதாரங்கள் வரவில்லை என்று சொல்கிறது நீதி மன்றம்.
ஆம், மக்கள் உரிமைகளுக்காகவும் ஜனநாய கத்துக்காகவும் நடத்துகிற போராட்டம் என்பது இன்று பாஜக-வுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் எதிரான போராட்டம்தான். இவ்வாறு பிருந்தாகாரத் பேசினார். அவரது ஆங்கில உரையை வங்கி ஊழியர் சங்க தலைவர் சி.பி.கிருஷ்ணன் தமிழாக்கம் செய்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்தி ரன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் மாணவர் சங்கத் தலைவர் இசக்கி வரவேற்றார்.
வர்க்கச் சுரண்டலை கெட்டிப்படுத்தும் சாதியக் கட்டமைப்பும் - ஆணாதிக்கமும்
அசோகா பல்கலைக்கழகப் பொருளாதார வல்லுநர் அஸ்வினி தேண்பாண்டே தற்போதைய தொழிலாளர் நிலைமை குறித்து மெற்கொண்ட ஆய்வு முக்கியமான ஒன்றை நமக்குச் சொல்கிறது. ஊரடங்கால் மார்ச், ஏப்ரல் மாதங்களிலிருந்து வேலையிழந்துள்ள மொத்தத் தொழிலாளர்களில் தலித்துகள் 64 சதவீதம் பேருக்குத்தான் மறுபடி வேலை கிடைக்கிற வாய்ப்பு இருக்கிறது. உயர்சாதிப் பிரிவினரில் 77 சதவீதத்தினரும். பிற்படுத்தப்பட்டோரில் 71 சதவீதத்தினரும் மறுபடி வேலைவாய்ப்பைப் பெறக்கூடும். வேலையிழந்துள்ள பெண்களில் 61 சதவீதத்தினருக்குத்தான் மீண்டும் வேலை கிடைக்கும், ஆண்களில் 71 சதவீதத்தினருக்கு வேலை கிடைக்கக்கூடும் என்று சிஎம்ஐஐ (இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்) தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அவர் தெரிவித்திருக்கிறார். தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டமே மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். தொழிலாளர் வர்க்க உரிமைகளுக்காகப் போராடுகிறபோது, இந்தியச் சமூகக் கட்டமைப்பில், இந்தியாவின் சமூகப் பொருளாதாரச் சூழலில், பெண் தொழிலாளர்கள், தலித் தொழிலாளர்கள், பழங்குடித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் பிரச்சினைளைக் கண்டறிந்து போராட வேண்டும். தலித்துகள் அதிகமாக வேலை செய்யும் துறைகளில் தற்காலிக வேலையாக்குவது மிக வேகமாக நடந்துவருகிறது. சாதியக் கட்டமைப்பும், ஆணாதிக்கமும் வர்க்கச் சுரண்டலைக் கெட்டிப்படுத்துகின்றன, கார்ப்பரேட் லாபக் குவிப்புக்கு உதவுகின்றன என்ற புரிதலோடு போராடியாக வேண்டும்.