அசோக் நீ மறைந்து விட்டதாகச் சொல்கிறார்கள்
நம்பித்தான் தொலைக்க வேண்டியுள்ளது
நீ என்ன உன் சாதிக்கு மட்டுமா போராடினாய்
அந்த ‘ சாதிக்கும் சேர்த்து தானே
உன் கரங்களில் கொடிகள் உயர்ந்தன
கழுதைக்குத் தெரியுமா?
கரும்பு ருசி என்று சொல்லி
கழுதைகளை கேவலப்படுத்த
விரும்பவில்லை
காட்டுமிராண்டிகள் என்று சொல்லி
அந்த காட்டுமிராண்டிகளையும்
கேவலப்படுத்த விரும்பவில்லை
ஜூலை 23ல் உறங்கிக் கிடந்த திருநெல்வேலி மனசாட்சி
ஜூன் 14ல் லேசாகவேனும் விழித்துக் கொண்டது.
கூட்டத்தைச் சீக்கிரம் முடிங்க
போகனும் என்று ஒன்றுக்கு
இரண்டு முறை முதல் நாள்
சொன்னதின் பொருள் இதுதானா?
என்ன பேசினாலும் எது சொன்னாலும் அந்த
உதட்டோர நமட்டுச் சிரிப்பில்
கரைத்து விடும் உனது பாங்கு
வேறு யாருக்கும் கைகூடுமா
தெரியவில்லை
இருக்கும் போது சரி
மறைந்த போதும் சரி
உன் வழியில் நடை போட்ட
அந்த சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும்
வணக்கங்களும் வாழ்த்துக்களும்
உனக்கு எங்கள் செவ் வணக்கம்.
வீ.பழனி, நெல்லை