tamilnadu

img

இந்திய ரயில்வேயின் அபாய அறிவிப்பு 30 ரயில்களை இழக்கிறது தமிழகம்

சு.வெங்கடேசன் எம்.பி., அதிர்ச்சித் தகவல்

மதுரை, ஜுன் 18- இந்திய ரயில்வேயின் அபாய அறி விப்பால் தமிழகம் 30 பயணிகள் ரயில் களை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.   ரயில்வே வாரிய உறுப்பினராகவும் செயலாற்றி வரும் சு.வெங்கடேசன் எம்.பி., வியாழனன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: ரயில்வே வாரியம்  ஜுன் 17 புதன ன்று ஒரு உத்தரவினை வெளியிட்டுள் ளது. இந்தியா முழுவதும் உள்ள 17 ரயில்வேக்களில் இயங்கும் 508 பயணி கள் ரயிலை விரைவு வண்டிகளாக மாற்றி 19-6-20 க்குள், அதாவது வெள்ளி பிற்பகல் 4 மணிக்குள் முடிவெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து ரயில்வேக்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

200 கிலோமீட்டருக்கு மேல் இயக்கப் படும் 508 பயணிகள் ரயில்கள் நிறுத்தங் கள் குறைக்கப்பட்டு, கட்டணங்கள் இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டு விரைவு ரயில்களாக அறிவிக்க உத்தர விடப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் 34 இணை ரயில்கள் அடங்கும். அதில் தமிழகத்தின் 30 ரயில் களும் கேரளத்தின் 4 ரயில்களும் அடங்கும். விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கும், புதுவையிலிருந்து திருப் பதிக்கும், விழுப்புரத்திலிருந்து திரு நெல்வேலிக்கும், மதுரையிலிருந்து கொல்லத்துக்கும், கோவையிலிருந்து கண்ணனூருக்கும் இயங்கிக்கொண்டி ருக்கும் பயணிகள் ரயில்கள் இதில் அடங்கும்.

விரைவு வண்டிகளாக மாற்றப்படுவ தால் பல ஊர்களில் ரயில்கள் நிற்காது. இதன் மூலம் நகரங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சிற்றூர்கள் பெரும் பாதிப்பினை சந்திக்கும். வணி கத்துக்கும், தொழிலுக்கும் செல்பவர் கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கட்டணம் இரு மடங்கு அதிகப்படுத்தப் படும். கோவிட் -19 ஐ பயன்படுத்தி, தொழி லாளர் நலச்சட்டங்களை பறித்தது, பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்த்தது போன்ற மக்கள் விரோத நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசு இதனை செய்ய துணிந்துள்ளது. அதுவும் 48 மணி நேரத்தில் இதற்கான நடவடிக்கை எடுத்து அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேற்சொல்லப்பட்ட ஒவ்வொரு பயணிகள் ரயிலும் நாடாளுமன்றத் திலும், மக்கள் மன்றத்திலும் பல போராட்டங்களை நடத்தி பெறப்பட்ட வையாகும். அவை அனைத்தையும் ஒரே உத்தரவில் கிழித்தெறியும் ரயில்வே வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். அனைத்துப்பகுதி மக்களுக்கு எதிரான இந்த உத்தரவினை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.