தென்காசி:
மத்திய அரசைக் கண்டித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு மாவட்ட பீடி தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பாக அனைத்து சங்கங்களின் ஆர்ப்பாட்டம் கீழப்பாவூர் பீடி சங்க ஒன்றியச் செயலாளர் ஆரியமுல்லை தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.தங்கம், சிஐடியு பீடி சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.வேல்முருகன், பீடி சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.கற்பகவல்லி, பீடி சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆலங்குளம் மருதம்புத்துரில் 6 இடங்களில் பீடி தொழிலாளர்கள் சங்கம் சார்பாக வட்டாரச் செயலாளர் மகாவிஷ்ணு, வள்ளிமயில், நல்லையா, வள்ளியம்மாள் தலைமையில் நடைபெற்றது. கண்டபட்டியில் 2 இடங்களில் சங்க வட்டார நிர்வாகிகள் பரமசிவன், ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. ஆலங்குளம் குறிப்பன்குளத்தில் 2 இடங்களில் சங்க வட்டார நிர்வாகி அருணாச்சலம் மற்றும் சிபிஎம் தாலூகா குழு உறுப்பினர் பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் பீடி தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.