tamilnadu

img

‘இந்தி’ தெரிந்தால் வட மாநிலங்களில் வேலை கிடைக்குமாம்: அமைச்சர்

 சென்னை,டிச.4- மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தான் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள உலக தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதற்குக் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில்,செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், “மாணவர்கள் வேண்டி  விரும்பி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பிரெஞ்சு மற்றும் இந்தி மொழிகளின் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். தமிழ் மொழியின் பெருமையை வெளியில் கொண்டு செல்ல பிற மொழிகள் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்தி மொழியை கற்றுக் கொண்டால் வட மாநிலங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.