tamilnadu

img

இந்தி கட்டாயமில்லை

தமிழகத்தின்கடும் எதிர்ப்பால் சற்று பின்வாங்கியது மோடி  அரசு

புதுதில்லி, ஜுன் 3 -மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கைக்கு தமிழகம், கர்நாடகம் உட்பட கடுமையான எதிர்ப்புஎழுந்ததை அடுத்து இந்தித் திணிப்பு என்பதில் இருந்து இறங்கி வந்து வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்திருக்கிறது.மோடி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில், இந்தி பேசாத மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களி லும் தாய்மொழி, ஆங்கிலம், மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயம் பயிலவேண்டும் என்ற அம்சம் சேர்க்கப்பட்டி ருந்தது. நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில், ஏதாவது ஒரு நவீன இந்திய மொழியைமூன்றாவது மொழியாக அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டி ருந்தது.இந்தி மொழி பேசாத மாநிலங்களில், 6ஆம் வகுப்பில் இருந்து இந்தியை மூன்றாவது பாட மொழியாக்க வேண்டும் என்றும் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை யை தமிழக அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவில் திங்களன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி மும்மொழிக் கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம், மூன்றாவது மொழியைத் தேர்வு செய்வது தொடர் பான பிரிவில், இந்தி பேசாத மாநிலங்களில்,அந்தந்த மாநில மொழி, ஆங்கிலத்துடன், இந்தியை கற்பிக்க வேண்டும் என்ற பரிந்துரையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திபேசும் மாநிலங்கள், இந்தி பேசாத மாநி லங்கள் என பிரித்துக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அத்தகைய வகைப்பாடு நீக்கப்பட்டுள்ளது.மூன்றாவது மொழியை மாண வர்களே விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என பரிந்துரையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்பதே மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்கான அடை யாளம்தான் என்று கல்வியாளர்கள் இந்தத் திருத்தத்தின் பின்னணி பற்றிக் குறிப்பிடு கிறார்கள்.