tamilnadu

img

அரசு ரப்பர் கழக தொழிலாளர் போராட்டம்: பேரவையில் விவாதம்

சென்னை, மார்ச் 12- தமிழக சட்டப்பேரவையில் வியாழ னன்று(மார்ச் 12) கேள்வி நேரம் முடிந்த தும் குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக  தோட்டத் தொழிலாளர்களின் காலவரை யற்ற வேலை நிறுத்தம் குறித்து திமுக,  காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்ச ரின் கவனத்துக்கொண்டு வந்தனர். அப்போது நடந்த விவாதத்தில் பேசிய  திமுக உறுப்பினர் சுரேஷ்ராஜன்,“குமரி மாவட்டத்தில் இயங்கிக் கொண்டி ருக்கும் அரசுக்கு சொந்தமான ரப்பர் கழக  தோட்டத் தொழிலாளர்கள் 2 ஆயிரத்திற்  கும் அதிகமானோர் தொடர்ந்து வேலை  நிறுத்தம் செய்து வருகிறார்கள். இதற்கு  காரணம், கடந்த ஐந்து ஆண்டுகாலமாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. சுமார் 50 முறை பேச்சுவார்த்தை நடந்  தும் முடிவு எட்டப்படவில்லை. வனத்  துறை அமைச்சரும் இரு முறை பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது 23  ரூபாய் ஊதிய உயர்வு இடைக்காலமா  வழங்கப்படும் என்று 2018 ஆம் ஆண்  டில் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், இது வரை  நடைமுறைப்படுத்தப்பட வில்லை” என்றார். கடந்த திமுக ஆட்சியின்போது ரப்பர்  கழகத்திற்கு நட்டம் ஏற்பட்டபோதும் அரசு சார்பில் ரப்பர் கழகத்திற்கு நிதி  கொடுத்து தொழிலாளர்கள் பாதுகாக்  கப்பட்டதை சுட்டிக் காட்டி, அதைப்  போன்று இந்த அரசும் செயல்பட வேண்டும். போராடும் தொழிலாளர்க ளின் உணர்வுகளை புரிந்து அவர்க ளுக்கு நியாயமான ஊதிய உயர்வு  வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி னார்.

நாகர்கோவில் தொகுதி திமுக உறுப்  பினர் ஆஸ்டின்,“கடந்த 17.2.2020 முதல்  அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகி றார்கள். இதனால், நிர்வாகத்திற்கு ஒரு நாளைக்கு 14 டன் உற்பத்தி இழப்பு ஏற்ப டுகிறது என்றும், ஏற்கெனவே அமைச்சர்  இரு முறை பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது தொழிற்சங்க நிர்வாகி களிடம் 40 ரூபாய் ஊதிய உயர்வு வழங்க லாம் என்றார். அதற்கு சங்கத் தலைவர்க ளும் ஒப்புக்கொண்டனர். ஆனால், அரசு  அதிகாரிகள் அந்த தொகையை வழங்க  மறுக்கிறார்கள். எனவே, அந்த தொழிலா ளர்களை பாதுகாக்கும் வகையிலும், நிர்வாகத்தின் இழப்பை தடுக்கும் வகை யிலும் அமைச்சர் உடனடியாக தலை யிட்டு நல்ல முடிவு எடுத்து போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண் டும் என்றும் கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்  குமார்,“தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரப்பர்  தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனை யில் மாநில அரசு உடனடியாக தலையிட  வேண்டும். கடந்த காலத்தில் நடந்த பேச்சுவார்த்தையின்போது நிலுவைத் தொகையாக ரூ.17 உயர்த்தி வழங்க லாம் என்று ஒப்புக்கொண்டதை உடனடி யாக வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார்.