சென்னை,ஏப்.9- இந்தியா முழுவதும் முடக்கத்தால் பாதிக்கப் பட்ட 15 ஆயிரம் குடும்பங்க ளுக்கு முத்தூட் குழுமம் இலவச உணவு மற்றும் அத்தி யாவசிய பொருட்களை வழங்கியுள்ளது. தனது பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாடுகளின் ஒரு பகுதி யாக, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இலவச உணவு, தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட் களை வழங்கியுள்ளது. தமிழ்நாடு, உத்தரப்பிர தேசம், டெல்லி என்.சி.ஆர், மகாராஷ்டிரா, தெலுங் கானா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த முயற்சியை அது மேற் கொண்டுள்ளதாக முத்தூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.