tamilnadu

img

திண்டுக்கல்லில் இரவில் பூக்கும் கல்வி மலர்கள்

திண்டுக்கல், ஆக.31- திண்டுக்கல் தோல் பதனி டும் தொழிலாளர் சங்கம் சார் பாக இரவு பாடசாலைகள் தொடங்கப்பட்டு நடை பெற்றுவருகிறது. 15 ஆண்டு களாக தோல் பதனிடும் தொழிலாளர்களின் குழந்தை கள் உள்ளிட்ட ஏழை எளிய குழந்தைகள் இங்கு படித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஏ. பாலசுப்ரமணியம்  எஸ்.ஏ. தங்கராஜன். ஏ.முனுசாமி ஆகியோர் நினைவாக மூன்று இரவு பாடசாலைகள் நடைபெற்று வருகின்றன.  சவேரியார் பாளையம் சங்க அலுவலகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஏ.பி. இரவுப் பள்ளிக்கு அருகில் உள்ள புனித சேவி யர் பள்ளி மற்றும் அருகமை பள்ளிகளில் படிக்கும் 45 குழந்தைகள் படிக்க வரு கிறார்கள். பல ஆசிரியர்கள் இங்கு பணியாற்றியுள்ளனர்.  தற்போது ஜூலி என்ற ஆசி ரியர் நடத்தி வருகிறார்.  தோழர் எஸ்.ஏ.தங்க ராஜன் நினைவாக ஏ.பி. நகரில் ஆசிரியர் ஐஸ்வரியா தலைமையில் ஒரு பள்ளி நடைபெறுகிறது. ஓராண்டாக நடைபெற்று வரும்  இந்தப் பள்ளியில் திண்டுக்கல் ஊரா ட்சி ஒன்றிய பள்ளியில் பயி லும் மாணவ, மாணவிகள் 35 பேர் படிக்கிறார்கள். இந்த இரண்டு பள்ளிகளிலும் பாடம் நடத்தும் ஆசிரியர் களுக்கான ஊக்கத்தொகை யை சங்கம் வழங்குகிறது.  

தோழர் ஏ.முனுசாமி நினைவாக நேருஜி நகரில் ஆசிரியர் சிப்போராள் தலை மையில் பள்ளி நடைபெறு கிறது. இதில் 40-க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் கடந்த மூன்றாண்டுகளாக படித்துவருகின்றனர். இந்த பள்ளியின் ஆசிரியருக்கு தோழர் முனுசாமியின் குடும் பத்தினர் ஊக்கத்தொகை வழங்குகிறார்கள்.  சி.கே.சி.எம். காலனியில் அம்பேத்கர் பெயரில் இரவுப் பள்ளி விரைவில்  தொடங்கப் பட உள்ளது. தோல் பதனி டும் தொழிலாளர்களின் குழந் தைகள் கல்வி அறிவு பெற சங்கம் அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டு வரு கிறது. இந்த இரவுப் பள்ளி களில் படிக்கும் குழந்தை கள் தாங்கள் படிக்கும் பள்ளி களில் சிறந்து விளங்குவதாக ஆசிரியர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். இந்தப் பணி தொடர வேண்டுமென பகுதி மக்கள் விரும்புகிறார்கள். மேலும் பல பகுதிகளுக்கு செங்கொடியின் தலை வர்கள் பெயரில் இரவு நேரங்களில் கல்வி மலர்கள் மலர வாழ்த்துவோம்.

இலமு, திண்டுக்கல்