tamilnadu

img

நீர்நிலைகளில் உயிரிழப்பு: ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு

சென்னை, பிப். 24- தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், கோவில் குளங்கள், அருவி களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கக்  கோரி, சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மாவட்டம் தோறும் எடுத்  துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக் கையை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்  கொண்ட நீதிபதிகள். மார்ச் 9 ஆம் தேதிக்கு  தள்ளி வைத்தனர். மேலும், அறிக்கை தாக்கல்  செய்யாத ஆட்சியர்கள் அன்றையதினம் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தர விட்டனர்.