tamilnadu

img

ரஜினிக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம்

சென்னை,ஜன.24- ரஜினியின் சர்ச்சை பேச்சுக்கு பெரியாரின் பேரனும் முன்னாள் காங்கிரஸ்  தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் கூறியிருப்பதாவது:- நினைத்தாலே இனிக்கும் படத்தில் நடித்த போது மனநிலை பாதிக்கப்பட்ட ரஜினி அதற்கு முழுமையாக சிசிக்சை எடுத்துக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் அவர் பெரியார் பற்றி உளறியிருக்கிறார். தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ பெரி யார் தான் காரணம் என்பதை அவர்  அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. பெரியார் ஆயிரம் விஷயங்கள் செய்திருப்பார். ஆயிரம் கருத்துக்களை சொல்லி இருப்பார்.  மக்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை விட்டு விடலாம். பெரியாரை முழுமையாக கொச்சைப்படுத்துவது தமிழர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

;