சென்னை, அக்.10- ஆசிரியர் பொதுமாறு தல் கலந்தாய்வு தொடர் பாக புதிய வழிகாட்டு நெறி முறைகள் அடங்கிய அர சாணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர் களுக்கு ஆண்டுதோறும் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் ஓரிடத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசியர்கள் சங்கம் மற்றும் தனிப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொட ரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கலந்தாய்வில் பங்கேற்க குறைந்தபட்சம் ஓரிடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி ருக்க வேண்டும் என்ற விதி யை தளர்த்த பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தர விட்டிருந்தது. இதன்படி அக்டோபர் 10 வியாழனன்று பள்ளிக் கல்வித்துறை அரசாணை யை வெளியிட்டுள்ளது. இதில், கண்பார்வை அற்ற வர்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடலில் குறை யுடைய மாற்றுத்திற னாளிகள், சிறுநீரகம் பாதிக் கப்பட்டவர்கள், புற்று நோயாளிகள் ஆகியோ ருக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது.