சென்னை, ஆக. 1- ஆயுள் கைதியை முன்கூட்டியே விடு தலை செய்ய மறுத்த முடிவு சரியா? தவறா? என்பது குறித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விவாதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தருமபுரியைச் சேர்ந்த செந்திலை நன்னடத்தை அடைப் படையில் விடுதலை செய்யக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாக ரன், அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, செந்தில் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தர விட்டனர். இவ்வழக்கில் வியாழனன்று(ஆக.1) ஆஜராகி வாதாடிய அரசு வழக்கறிஞர், செந்திலின் முன் விடுதலை கோரும் மனு வை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 6 வாரத் தில் பரிசீலிக்கப்பட்டதாகவும், அவரை விடு தலை செய்ய முடியாது என உள்துறை முடிவு எடுத்ததாகவும் தெரிவித்தார். அதேசமயம் அரசு எடுத்த முடிவு சரி யானதா? என நீதிமன்ற அவமதிப்பு வழக் கில் விவாதிக்க முடியாது என்றும், அந்த முடிவை எதிர்த்து தனி வழக்காகத்தான் தொடுக்க முடியுமெனவும் விளக்க மளித்தார். இதை பதிவு செய்த நீதிபதி கள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடா மல் ஒத்திவைத்தனர்.