நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்
சென்னை/கோவை, ஆக.2- நாடாளுமன்றத்தில் மத்திய மோடி அரசு தாக்கல் செய்துள்ள தொழிலாளர் விரோத மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 2 வெள்ளியன்று அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக மோடி அரசு கார்ப்ப ரேட் ஆதரவு கொள்கையை மிகத்தீவிர மாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்ஒருபகுதியாக தொழிலாளர் களுக்கு சாதகமானவற்றை நீக்கியும், பெருமுதலாளிகளுக்கு ஆதரவான வற்றை இணைத்தும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்துள்ளது. இதில், 44 தொழிலாளர் நலச்சட்டங் களை 4 சட்டங்களாக சுருக்கியுள்ளது. குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயி ரம் என பரிந்துரைக்கப்படும் நிலை யில், ஊதிய விதிகள் மசோதாவில் வெறும் ரூ.4,628 எனக் குறிப்பிட்டு மக்க ளவையில் தாக்கல் செய்யப்பட்டுள் ளது. மேலும் மோட்டார் வாகன சட்ட திருத்தம் மூலம் தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளும் பறிப்பு, வாகன பதிவுக்கட்டணம், காப்பீடு உள்ளிட்ட அனைத்து கட்டணங்களை யும் கடுமையாக உயர்த்தி மக்களவை யில் மசோதா தாக்கல் செய்துள்ளது. இதேபோல், சேலம் உருக்காலை உள்ளிட்ட 3 உருக்காலைகள், 41 பாது காப்பு தொழிற்சாலைகள், ரயில்வே, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. இத்தகைய தொழிலாளர் விரோத மோடி அரசைக் கண்டித்து நாடு முழுவதும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன இயக்கங்கள் தொடர்கின்றன.
சென்னை
இதன் ஒருபகுதியாக அனைத்து சங்கங்களின் சார்பில் வெள்ளியன்று சென்னை சேப்பாக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச மாநில பேரவைத்தலைவர் சுப்புராமன் தலைமையில் திருச்செல்வம், பொன்முடி, பாலகிருஷ்ணன், எஸ்.கே.மகேந்திரன், சி.திருவேட்டை (சிஐடியு), பன்னீர்செல்வம் (ஐஎன்டி யுசி), டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி), ராஜா ஸ்ரீதர் (எச்எம்எஸ்), பாலாஜி (ஏஐயுசி யுசி), குமரேசன் (ஏஐசிசிடியு) உள்ளிட்ட மாநில தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
கோவை
கோவை தெற்கு தாலுகா அலுவல கம் முன்பு ஐஎன்டியுசி தலைவர் வி. ஆர்.பாலசுந்தரம் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், ஏஐ டியுசி மாவட்ட செயலாளர் சி.தங்க வேல், எல்பிஎப் ரத்தினவேல், எச்எம்எஸ் ராஜாமணி, எம்எல்எப் தியாகராஜன் மற்றும் ஏஐசிசிடியு, வங்கி, இன்சூரன்ஸ், பிஎஸ்என்எல் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்ம நாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட தொழிற்சங்க ஊழி யர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.