சென்னை, ஜூன் 26- சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில் அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- கொரோனாவைவிடக் கொடூர மான முறையில் தமிழகக் காவல் துறை நடந்து கொண்ட காரணத் தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் வணிகர் ஜெய ராஜூம், அவரது மகன் பென்னிக் சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டி ருக்கிறார்கள். மனிதத்தன்மையற்ற இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட - துணை நின்ற அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதிக்கான போராட்டத்தை ஜன நாயக சக்திகள் அனைத்தும் வலி மையுடன் தொடர வேண்டியுள்ள நிலையில், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும்.
கணவன் - மகனை பறிகொடுத்து, மூன்று பெண் பிள்ளைகளின் கண்ணீ ருக்குப் பதில் சொல்ல முடியாமல் வேதனைத் தீயில் வெந்துகொண்டி ருக்கும் அம்மையார் செல்வ ராணிக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத் திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.