tamilnadu

img

அமைச்சர் மீது ஆளுநரிடம் திமுக புகார்

சென்னை, பிப். 3- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோ கித்தை சந்தித்து மனு கொடுத்த னர். சென்னை திமுக மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன், ம.சுப்பிரமணியன் ஆகியோர் திங்களன்று(பிப்.3) ஆளுநர் மாளி கைக்கு சென்று  பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்,“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதச் சார் பின்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். உரிய நடவ டிக்கை எடுக்காவிட்டால், சட்டப் பூர்வமாக நீதிமன்றத்தை அணுகி நடவடிக்கை எடுப்போம்” என்றனர்.