tamilnadu

img

ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆவடி பகுதி தலைவர் பேச்சியம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

அனைத்து வகையான பருப்பு உள்ளிட்ட 21 பொருட்களை நியாய விலைக் கடைகளில் வழங்கக் கோரி அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆவடி பகுதி தலைவர் பேச்சியம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் புனிதா உதயகுமார், விமலா உள்ளிட்டோர் பேசினர். திருவெற்றியூர் பகுதி, 4வது வட்டத்திற்கு உட்பட்ட  ராமநாதபுரத்தில் அலமேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலா ளர் எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் புஷ்பா உள்ளிடோர் பேசினர். காட்டுமன்னார்கோயில் ராஜசூடாமணி, வீரானநல்லூர், வீரனந்தபுரம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் தேன்மொழி,  நிர்வாகிகள் சசிகலா, ரேணுகா, சுகந்தி, சுமதி, பாலசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.