tamilnadu

img

"பப்ஜி" விளையாட்டுக்கு இறுதி ஊர்வலம் நடத்திய தில்லி இளைஞர்கள்... 

தில்லி 
எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா - சீனாவிற்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. பதற்றத்தை தவிர்க்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் எல்லையில் அடிக்கடி பேச்சு வாரத்தை நடத்தி வருகின்றன. 

எல்லை பிரச்சனை சம்பவத்திற்கு பிறகு மத்திய அரசு "டிக் டாக்" உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஆப்-களுக்கு தடை விதித்தது. இந்த மாத தொடக்கத்தில் இந்திய இளசுகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற ஆன்லைன் விளையாட்டன "பப்ஜி" உட்பட மேலும் 59 செயலிகளுக்கு தடை விதித்தது.  

இந்த ஆன்லைன் விளையாட்டுத் தடையால் நாடு முழுவதும் சில இடங்களில் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன. மனதைரியம் உள்ள சிலர் முகநூல், டுவிட்டர் பக்கங்களில் மீம்ஸ் செய்து சோகத்தை நிகழ்த்தி வருகின்றனர்.  

இந்நிலையில் தில்லி இளைஞர்கள் ஒருபடி மேலே சென்று பப்ஜி போஸ்டருடன் பாடை கட்டி இறுதி ஊர்வலம் நடத்தி அதகளப்படுத்தி உள்ளனர். வெள்ளை நிற உடையணிந்து ‘வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்‘ என்று கோஷமிட்டபடி ஊர்வலம் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக டிரெண்ட் ஆகி வருகிறது.