தோழர் ஏ.அப்துல் வஹாப் படத்திறப்பு நிகழ்ச்சியில் கே.வரதராசன் புகழஞ்சலி
மதுரை,பிப்.6 - கட்சிக்காக தாக்குதலை எதிர்கொண்டு பெரும்பணிகளை செய்தவர் தோழர் அப்துல் வஹாப் என்று அவரது படத்திறப்பு நிகழ்ச்சியில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் கே.வரதராசன் புகழாரம் சூட்டினார். விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலை வரும் தீக்கதிர் நாளிதழின் முன்னாள் பொது மேலாளருமான “அத்தா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் ஏ.அப்துல் வஹாப் அவர்களின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி பிப்ரவரி 6 வியாழனன்று காலை மதுரை தீக்கதிர் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். தோழர் அப்துல் வஹாப் உருவப்படத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. வரதராசன் திறந்துவைத்து, புகழஞ்சலி உரை யாற்றினார்.
மத்தியக்குழு உறுப்பினர் கே.வரத ராசன் தனது உரையில், தோழர் அப்துல் வஹாப்பிடமிருந்து ஏராளமான விஷ யங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அவ ரது உருவப்படத்தை திறந்துவைக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெரும் மகிழ்ச்சி யடைகிறேன். கட்சியின் ஆரம்பகால கட்டத்தி லிருந்து தாக்குதலை எதிர்கொண்டவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தோழர் என்.சங்கரய்யாவோடு இணைந்து மாணவர் சங்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் உரு வாக்கியது முதல் தனது அரசியல் பயணத்தை துவக்கிய தோழர் அப்துல் வஹாப், பின்னர் சென்னையில் ஜனசக்தி அலுவலகத்திலும், அதைத்தொடர்ந்து திருச்சி பொன்மலை ரயில்வே சங்கத்திலும் செயலாற்றியவர். இன்றைக்கு மதுரை தீக்கதிர் அலு வலகத்தின் வளர்ச்சியை உறுதி செய்ததில் எந்த அளவுக்கு பங்கு உள்ளதோ அதே அளவுக்கு திருச்சி பொன்மலை சங்கத் திடலை பாதுகாத்ததிலும் பங்குண்டு. அதை விட முக்கியமானது, தமிழக-கேரள எல்லை யில் இடுக்கி மாவட்டத்தில் தோட்டத் தொழி லாளர் சங்கத்தை பிரம்மாண்டமான முறை யில் உருவாக்கி வளர்த்தவர். சமவெளிப் பகுதியில் கட்சிப் பணியாற்றுவதற்கும் இரு மாநில எல்லையில் மலைப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டும் பணியை செய்வதற்கும் நிறைய வித்தி யாசம் உண்டு. மலைப்பகுதியில் தொழிலா ளர்களைத் திரட்டுவது மிக மிகக் கடின மானப் பணி. அந்தப் பணியையும் அவர் அர்ப்பணிப்புடன் செய்தார். இந்தப் பணிகளை யெல்லாம் ஆற்றிய பின்னர்தான் 1974ல் தீக்கதிருக்கு வந்து சேர்ந்தார். ஆனால் அதற்கு முன்பும் பின்பும் தீக்கதிரின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் தோழர் அப்துல் வஹாப் அவர்கள். இப்படி பல அவதாரங்களை எடுத்து இத்தனை பணி களை ஆற்றிய போதிலும் அவர் ஒரு போதும் தன்னை முன்னிறுத்தியவர் அல்ல. கட்சி ஸ்தா பனத்தின் ஒரு உறுதிமிக்க, மிக மிக நம்பிக்கை யான ஊழியராக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவர் அவர் என்று புகழாரம் சூட்டினார்.
கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் ஏ.லாசர், தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொதுமேலாளர் கே.கனகராஜ், முன்னாள் பொதுமேலாளர் எஸ்.ஏ.பெருமாள், முன் னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன், தேனி மாவட்ட மூத்த தலைவர் கே.ராஜப்பன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், செய்தியாசிரியர் ப.முருகன், முன்னாள் அச்சக மேலாளர் எஸ்.பி.சிக்கந்தர், முன்னாள் விநியோக மேலாளர் கே.ஏ.டி.தியாகதேவி, செம்மலர் மூத்த துணை ஆசிரியர் தி.வரத ராசன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்திப் பேசி னார். விளம்பர மேலாளர் ஆர்.உமாபதி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தோழர் அப்துல் வஹாப் குடும்பத்தினர், கட்சியின் மாநில கட்டுப் பாட்டுக்குழு தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன், தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், விருதுநகர் மாவட்டச் செய லாளர் கே.அர்ச்சுணன், மாநிலக்குழு உறுப் பினர் எம்.மகாலெட்சுமி, மதிமுக தொழிற் சங்க தலைவர் மகபூப் ஜான், தீக்கதிர் பொதுமேலாளர்கள் ஏ.பன்னீர் செல்வம், ஜோ.ராஜ்மோகன், தலைமைச் செய்தியாளர் சி.ஸ்ரீ ராமுலு, வைகை பிரிண்டர்ஸ் மேலாளர் கெ.பாண்டியராஜன், முன்னாள் அலுவலக உதவியாளர் கெர்சோம் மற்றும் கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட தலைவர்கள், தீக்கதிர் ஊழியர்கள், செய்தியாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, தீக்கதிர் முன்னாள் நிர்வாக மேலாளர் எம்.ஜே.பிரபாகர் உள்ளிட்ட தோழர்கள், மறைந்த தோழர் அப்துல் வஹாப் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி செய்தி அனுப்பியிருந்தனர்.