சென்னை, நவ.10- அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு இணையதள பாது காப்பு குறித்து பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துதல், இணைய தளத்தை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பான சிறப்பு பயிற்சி களை அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதன்படி, மாவட்டந்தோறும் 6 பேர் என 192 ஆசிரியை களும், கூடுதலாக 8 ஆசிரியைகளும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அண்ணா மேலாண்மை நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்க உள்ளதாகவும் சிறப்பு பயிற்சி பெறும் ஆசிரியைகளுக்கு பயிற்சி கட்டணமாக தலா 2 ஆயி ரத்து 200 ரூபாயை பள்ளிக்கல்வித்துறை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.