tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் உணவிற்கு வழியின்றி விசைத்தறி தொழிலாளி தற்கொலை

இளம்பிள்ளை, ஆக. 1- இளம்பிள்ளை அருகே கொரோனா பொதுமுடக்கத்தால் உணவிற்கு வழி யின்றி தவித்த விசைத்தறித் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள சென்னகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி கந்தசாமி (48). இவருக்கு மனைவி, 2  மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கந்த சாமி தனது வீட்டிலேயே இரண்டு விசைத் தறி வைத்து தொழில் செய்து வந்துள் ளார். இந்நிலையில், கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக வேலையின்றி கடும் சிர மப்பட்டு உணவிற்கே வழியில்லாமல்  தவித்து வந்துள்ளார். இதனால் மன முடைந்த கந்தசாமி அவரது வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற் கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த  அவரது உறவினர்கள் கந்த சாமியை மீட்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததில் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளி யன்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆட் டையாம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவிற்கு வழி யில்லாமல் விசைத்தறித் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.