சென்னை, மார்ச் 31- தேவை இன்றி, சாலை களில் சுற்றி திரிந்தால், 14 நாட்கள் கட்டாய தனிமை சிறையில் வைக்கப்படு வார்கள் என்று மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக் குமார் எச்சரித்துள்ளார்.
சென்னை - மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடை பெற்ற ஆலோசனை கூட்டத் திற்குப்பின் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், ஊர டங்கை கடைபிடிக்காத வர்கள் சமுதாயத்திற்கு எதி ரானவர்கள் என்றார். வெளி மாநிலத்தில் இருந்து வந்து தங்கி பணியாற்று பவர்களை யாராவது விரட்டி அடித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளில் பொருட் களை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் வியா பாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார். வடசென்னை மாவட்டம் மற்றும் தனது ராயபுரம் தொகுதியில் 13 பொருட்கள் அடங்கிய சிறிய பை மிக குறைந்த விலைக்கு விற் பனை செய்ய ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.