திருவண்ணாமலை, அக்.20- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கடந்த வெள்ளிக்கிழமை யன்று(அக்.18) வாட்ஸ்அப் மூலம் சமூக வலை தளத்தில் ஒரு ஆடியோ பதிவு வெளியிட்டிருந்தார். அதில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மாவட்டத்தின் பல பகுதி களில் வீடு வழங்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே அதுபற்றி, அலுவலர்க ளுக்கு எடுத்துக்கூறியும் இன்னும் பணி நிறைவடையாமல் உள்ளது. தற்போது அனைவருக்கும் வீடு வழங்குவதற்கு திங்கட்கிழமை (அக்.21) இறுதிநாள். அதற்குள் அனைவருக்கும் வீடு வழங்கவில்லை என்றால், ஊராட்சிமன்ற எழுத்தர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் எத்தனை பேரை வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்வேன். தப்பு செய்ப வர்களை வேடிக்கை பார்க்க நான் இங்கு ஆட்சியராக இல்லை. என்று அந்த ஆடியோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அவரசக் கூட்டம், திருவண்ணாமலை வட்டாட்சி யர் அலுவலக வளாகத்தில் ஞாயிறன்று(அக்.20) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மு.பாஸ்கர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ச.பாரி, மாவட்டச் செயலாளர் க.பிரபு, மாவட்டப் பொரு ளாளர் செ.முரளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர் சந்தித்த மாநில பொதுச் செயலாளர் ச.பாரி கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி அலுவலர்க ளின் வாட்ஸ்அப் குழுவில் ஒரு ஒலிப்பதிவை வெளியிட்டிருந்தார். பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். முடிக்காத வர்களை பணிநீக்கம் செய்வேன். நீங்கள் பணியை தொடர்ந்து செய்வதா, அல்லது வீட்டிற்கு செல்வதா? என்ற வாறு பேசியுள்ளார். மாவட்ட ஆட்சியரின் அவசரம் காரணமாக, அவசர கூட்டம் நடத்திய சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா மயங்கி விழுந்து, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மூன்றாண்டுகளாக, பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில், வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதில் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலில் உள்ள வர்கள் வீடுகளை பெறுவதற்கு பல்வேறு தடைகள் உள்ளது. சாப்பாட்டுக்கே வழியில்லாதவர்கள் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு, வீடு கட்ட முடியாது என பல குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக முதல் தவணை பெற்றோர்கள் கூட, வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர். வங்கியில் செலுத்திய பணத்தைக் கூட, பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். அடித்தளம் அமைக்கவே ரூபாய் ஒரு லட்சம் செலவாகிறது. 70 ஆயிரத்தில் எப்படி வீடு கட்டுவது என, மக்கள் பலர் தவித்து வருகின்றனர். இதை மாவட்ட ஆட்சியரும் பார்த்துள்ளார். கள நிலவரம் குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலகப் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் அனை வருக்கும் இத்தகைய நிலைமை உள்ளது தெரியும். ஆனால் மாவட்ட ஆட்சியர், மந்திரத்தில் மாங்காய், தந்திரத்தில் தேங்காய் என்கிற விதமாக, உடனடியாக பணிகளை முடிக்க வேண்டும் என்று கூறுவது அதிர்ச்சியாது உள்ளது. மாவட்ட ஆட்சியர் துறை ஊழியர்களை தொடர்ந்த மிரட்டி வருகிறார். ஆய்வுக் கூட்டங்களில் அவர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்து, நீங்கள் அனைவரும் தூக்குப்போட்டு செத்துப்போங்கள் என்று அதிகார துஷ்பிரயோகத்தில் பேசுகிறார். பணிகளில் உள்ள குறைகளை கலைவதற்கு உண்டான நடவடிக்கைகள் குறித்து, அவரிடம் பேசும்போது, காதுகளை இரண்டு கைகளாலும் மூடிக் கொள்கிறார். இப்படியான ஆட்சியர் உள்ள நிலையில், பயனாளிகள் பங்களிப்பு டன் செய்யப்படும் திட்டங்களை எப்படி செயல்படுத்துவது என்ற அதிர்ச்சி அலுவலர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களை எதிரிகளை போல பார்க்காமல், ஊழியர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றோம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005 ஆம் ஆண்டு துவங்கப்ப ட்டது. இந்த திட்டத்தில் இந்திய அளவில் பல்வேறு சிறப்பான பணிகளை செய்து, பல விருதுகளை திருவண்ணாமலை மாவட்டம் பெற்றுள்ளது. அந்த திட்டத்தில் அதிக மனித சக்தியை பயன்படுத்தியது, அந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கியது, அந்த திட்டத்தில் மழை நீர் கட்டமைப்பு வசதிகளை இந்தியாவிலேயே அதிகமாக செயல்படுத்தியது, திருவண்ணாமலை மாவட்டம் தான். அத்தகைய பணிகளை செய்த ஊழியர்கள், இந்த திட்டப் பணிகளை யும் செயல்படுத்துவதற்கு தயாராக உள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் வாட்ஸ் அப் செய்தி மூலம், துறை ஊழியர்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்து வருகிறார். எனவே அவரின் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டு, ஊழியர்களை அரவணைத்து, பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றோம். மாவட்ட ஆட்சியரின் இத்தகைய போக்கை கைவிடக்கோரி, இன்று (அக். 21) திங்களன்று ஆயிரக்கண க்கான ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து வேலையில் ஈடுபடுவார்கள். அடுத்த நாள் செவ்வாயன்று(அக்.22) பகல் ஒரு மணிக்கு, அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் குறித்தான, உண்மைத் தன்மை குறித்து விளக்கக் கூட்டம் நடத்த உள்ளோம். அதேபோல் வரும் 25 ஆம் தேதி, மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனக்கோரி, சென்னை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரிட மும், மனித உரிமை ஆணையத்திட மும், மாநில, மாவட்ட, நிர்வாகிகள் சென்று முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.