மதுரை, ஏப்.22- 100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் குறைந்த பட்சம் ஒரு வார்டிற்கு 30 முதல் 40 பேர் வரை தூய்மைப் பணியா ளர்கள் பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகி றார்கள். இதில் போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி பல வார்டு களில் தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இது குறித்து தூய்மைப் பணியா ளர்கள் கூறுகையில், முகக்கவசம், கையுறை போன்றவை எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஒரு முறை பயன்படுத்தும் முகக்கவசம் என்பதை மூன்று தினங்களுக்கு ஒரு முறையும் கை உறையினை சுத்தப்படுத்தி ஒரு வாரத் திற்கும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சில அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இவைகளை இரண்டு தினங்களுக்குக் கூட பயன்படுத்த முடியாத நிலையில் உபயோகமற்ற நிலைக்கு வந்தால் அவற்றை தூக்கி எறிந்து விட்டு வெறும் கைகளில்தான் குப்பைகளை அள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி ஆணை யாளர் தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசங்களை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தனர்.