tamilnadu

குழந்தைகள் விற்பனை வழக்கு

நாமக்கல்,மே 22-ராசிபுரம் குழந்தைகள் விற் பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமுதாஉள்பட 7 பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நாமக்கல் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது. குழந்தைகளை சட்ட விரோதமாக வாங்கி விற்பனை செய்ததாகஅமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், கருமுட்டை இடைத்தரகர்களான பர்வீன்பானு, ஹசீனாஎன்ற நிஷா, லீலா, அருள்சாமி, செல்வி ஆகிய 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை மேற்கொண்டு, உதவி செவிலியர் சாந்தி, பெங்களூரு அழகுக்கலை நிபுணர் ரேகாஆகிய இருவரை கைது செய்தனர். இவ் வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் அமுதாவின் தம்பியான நந்தகுமார் (39),கடந்த 16-ஆம் தேதியன்று திருச்சிநீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில்கைதான அமுதா உள்பட 7 பேர்ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்டமுதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.