நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்சானிக் ஆல்பம்30, அரசு ஊழியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வியாழனன்று (ஜூன் 5) சென்னை எழிலகம் வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஊழியர்களுக்கு மருந்தை வழங்கினார். மருத்துவர் செந்தில்குமார், அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாவட்டத் தலைவர் சா. டேனியல் ஜெயசிங், மாவட்டச் செயலாளர் வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மற்றும் சேப்பாக்கம் பகுதி குழு நிர்வாகிகள் டிபிஐ பகுதி குழு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.