tamilnadu

காந்தியின் இதயத்தில் இடம்பிடித்த அண்ணாசாமி சுந்தரம்

கோவை வெள்ளலூரை சார்ந்த சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற அப்பய்ய தீட்சித பரம் பரையை சார்ந்த வழக்கறிஞர் அண்ணாசாமி அய்யரின் மகன் சுந்தரம். இளம் வயதிலேயே கல் விப்புலமை பெற்ற இவர் சென் னையில் கல்லூரி ஒன்றில் இரண் டாமாண்டு படித்து வந்த நிலை யில் கோகலேயின் விடுதலைப் பேச்சால் ஈர்க்கப்பட்டு கல்லூரியை விட்டு வெளியேறி காங்கிரஸ் தொண்டராக தன்னை அர்ப்பணித் துக் கொண்டார். விடுதலைப் போராட்டத்திலும், காந்தியின் கிரா மப்புற முன்னேற்ற திட்டங்களை சென்னை மாகாணத்தில் அம லாக்குவதிலும் தீவிர பங்காற்றிய காரணத்தால் காந்தியின் மனம் கவர்ந்த சீடராக உயர்ந்தார். மேலும் காந்தி நடத்தி வந்த பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியும் வந்தார். 

இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்கு கலந்து கொள்ள காந்தி தன்னுடன் சுந்த ரத்தை அழைத்துச் சென்றார். மாநாட்டிற்கு முன்பாக ஐரோப்பி யாவின் பல்வேறு நாட்டு தலை வர்களை நேரில் சந்தித்து இந்திய நிலைமைகளை எடுத்துச்சொல்ல காந்தி தன்னுடைய பிரதிநிதியாக சுந்தரத்தை அனுப்பி வைத்தார். இந்த சுற்றுப்பயணத்தின்போது இத்தாலியின் முசோலிசியையும், போப் பயஸ் XI ஆகியோரையும், பிரான்ஸ், செக்கோலேவிகியா, ஜெர்மன் நாடுகளின் தலைவர் களையும் சந்தித்து காந்தியின் கொள்கைளை எடுத்துரைத்தார்.  பல்வேறு கலை, இலக்கிய அறி வுஜீவிகளை சந்தித்த சுந்தரம், கபாத் என்னுமிடத்தில் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை சந்தித்து இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்தும், காந்தியக் கொள்கைககள் குறித்தும் அவரிடம் பரிமாறியுள்ளார். பதி லுக்கு ஐன்ஸ்டீனும் தன் கைப்பட எழுதிய கடிதத்தை,  சுந்தரம் மூல மாக அனுப்பி வைத்துள்ளார். 

இதன்பின் காந்தியின்  நம்பிக் கைக்குரிய சீடரான சுந்தரத்தை, பனாரஸ் பல்கலைக்கழக நிர்வாக பொறுப்பை அளித்து கவனிக்கச் சொன்னார். காந்தியின் வேண்டு கோளை ஏற்று தனது இறுதி நாள் வரையிலும் இப்பொறுப்பை நிறைவேற்றினார்.இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து தேசத் தந்தையின் இதயத்தில் இடம்பிடித்து விடுதலைப் போராட் டத்தின் தலைவராக உயர்ந்து நின்ற சுந்தரத்தின் சேவையால் வெள்ளலூர் பெரும் பெருமை பெற்றது.

(வெள்ளலூரின் வரலாற்று நிகழ்வுகளின் பதிவுகளை தேடிக் கண்டுபிடித்து அவைகளை நுலாக தொகுத்த ஆசிரியர் வெ.கோ.பாலதண்டபானி கூறியது)

சுதந்திர தின சிறப்பு மலர் தொகுப்பு கட்டுரைகள்: - எஸ்.ஏ.மாணிக்கம், வே.தூயவன், அ.ர.பாபு, ஆ.ஜீவானந்தம், அருண், மணியாழன், மகாதேவன்.