சென்னை, ஜன. 29- அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும் பெயரில் எந்த மாற்றமும் இருக்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்காக அதனை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப் பட்டு, அதற்காக அமைச்சர்கள், அதிகாரி கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடை பெற்றது. அதில் அமைச்சர்கள் செங் கோட்டையன்,கே.பி.அன்பழகன், ஜெயக் குமார், சி.வி.சண்முகம் மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், “இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து கூட் டத்தில் ஆலோசிக்கப்பட்டது” என்றார்.