சென்னை, மார்ச் 9- மாநிலங்களவைத் தேர்த லில் அதிமுக சார்பில் போட்டி யிடும் 3 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள் ளது. அதன்படி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, கொள்கைப் பரப்புச் செயலாளரும் மக்க ளவை முன்னாள் துணைத் தலை வருமான தம்பிதுரை போட்டி யிடுவார்கள் என்று அறி விக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்திற்கு அதிமுக கூட்டணி யில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை அறிவித்துள்ளது.
கடந்த முறை மாநிலங்கள வைக்கு நடந்த தேர்தலில் பாமகவின்அன்புமணி ராம தாசுக்கு வாய்ப்பு கொடுத்த னர். இப்போது தமிழ் மாநில காங்கிரசுக்கும் சீட் கொடுத்துள் ளது. ஆனால், கூட்டணியில் பெரிய கட்சிகளில் ஒன்று தேமு திக. அக் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அக் கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை பல முறை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்தும் தேமுதிக வுக்கு சீட் வழங்கப்படுமா? என்பது குறித்தும் முன்னாள், இன்னால் அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “ராஜ்யசபா சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை’ என்று கூறிவந்தனர்.
இந்த நிலையில், அதிமுக வெளியிட்ட பட்டியலில் மாநி லங்களவை உறுப்பினர் பதவி யைக் கோரி வந்த தேமுதிக வுக்கு வாய்ப்பு வழங்கப் பட வில்லை. தேமுதிகவுக்கு அல்வா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக பொரு ளாளர் பிரேமலதா மிகவும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைக் கேள்விப்பட்டதுமே, தமிழ் மாநில காங்கிரசை விடவா, தேமுதிக சின்ன கட்சி யாக போய்விட்டது என கொந்தளித்துப் போயுள்ளாராம் பிரேமலதா விஜயகாந்த். இத னால் கூட்டணிக்குள் சிக்கல் எழும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.