tamilnadu

img

கொள்முதல் செய்யும் பாலை ரசாயன பரிசோதனை செய்ய ஆவின் முடிவு

சென்னை,நவ.29- வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் முக வர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பால்  ரசாயன பரிசோதனை முறையை தீவிரமாக கடைபிடிக்க ஆவின் பால் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பொதுமக்களுக்கு பல்வேறு நிறுவனங் கள் பால் விற்பனை செய்கின்றன. சிலர் இந்த  பாலில் கலப்படம் செய்வதாகவும், உயிருக்கு  ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை கலந்து விற்பதாகவும் புகார்கள் எழுந்தன. இந்தநிலையில் இந்திய உணவு பாது காப்பு நிறுவனம் பால் விற்பனை செய்யும் பல்வேறு நிறுவனங்களின் பாலை ஆய்வு செய்தது. சமீபத்தில் நடந்த ஆய்வில் சில நிறு வனங்கள் விற்பனை செய்யும் பாலில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் வந்தி ருப்பது தெரியவந்தது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதை யடுத்து பால் உற்பத்தியாளர்கள் விற்பனை செய்யும் பாலை ரசாயன சோதனை செய்ய வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வருகிற ஜனவரி 1ஆம் தேதி  முதல் முகவர்களிடம் கொள்முதல் செய்யப்ப டும் பால் ரசாயன பரிசோதனை செய்யப்படு கிறது. பால் பரிசோதனை செய்வதற்கான சான்றிதழ்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதில் கொள்முதல் செய்யப்பட்ட பாலின் தரம் பாலில் ரசாயன தன்மை உள்ளதா என்பது பற்றிய விவரம் குறிப்பிடப்படும். இதுதவிர பாலை விற்பனை செய்யும் நிறு வனங்கள் பாலில் ரசாயன தன்மையை அறி யும் கருவிகளை பொருத்த வேண்டும். இதை  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முறைப்படி  ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது.

ஆவின் பால் நிறுவனம் இந்த பரி சோதனை முறையை தீவிரமாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஆவின் பால் எந்த குறைபாடும் இல்லாமல் மக்க ளுக்கு விற்பனை செய்வது உறுதி செய்யப்  படும் ஆவின் நிறுவனத்துக்கு பால் விற்பனை செய்யும் விவசாயிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவர்களுக்கு வழங்கப்படும். கொள்முதல் செய்யப்படும் பாலின் தரம் குறித்து நடத்தப்படும் பரி சோதனை சான்றிதழ்களை அவர்கள் வைத்தி ருக்க வேண்டும். ஆவின் பால் சேமிக்கப்ப டும் நிலையங்களிலும் ரசாயன பரிசோத னைக் கருவி நிறுவப்படும். ஆவின் நிறு வனம் வருகிற ஜனவரி மாதம் முதல் இந்த முறையை முழுமையாக கடைபிடிக்க நடவ டிக்கை எடுத்துள்ளது என்று ஆவின் நிறுவன  அதிகாரிகள் தெரிவித்தனர்.