tamilnadu

img

விழுப்புரம், அரியலூர் விபத்துகளில் 7 பேர் பலி

சென்னை, செப்.13- விழுப்புரம் மற்றும் அரி யலூர் மாவட்டங்களில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரு பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அம்மாகுளம் கிரா மத்தைச் சேர்ந்த ஏழுமலை தனது மகளுக்கு மாப் பிள்ளை பார்ப்பதற்காக மாருதி சுசுகி வாடகை காரில்  உறவினர்களுடன் ஈரோடு  நோக்கி சென்றுகொண்டி ருந்தார். அதிகாலை 6 மணிக்கு தியாகதுருகம் புறவழிச் சாலையில் நிலை தடுமாறி கார் உருண்டோடி அருகிலிருந்த 15 அடி ஓடைப் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை, பாலாஜி, சித்திரா, ஜெயக் கொடி, ஆகிய 4 பேர் உயிரி ழந்தனர்.

ஓட்டுநர் சிவக்குமார், சாந்தி ஆகிய இருவர் படு காயத்துடன் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த சம்பவம் குறித்து  தியாகதுருகம் காவல்துறை யினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதேபோல் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே, தழுதாழைமேடு என்ற இடத்தில் அதிகாலை 4 மணிக்கு பெங்களூர் நோக்கிச் சென்ற கார், எதிரே மணல் ஏற்றி வந்த  டிப்பர் லாரியுடன் நேருக்கு  நேர் மோதி விபத்துக்குள்ளா னது. கர்நாடக மாநிலம் கோலா ரைச் சேர்ந்த 7 பேர் திரு நள்ளாறுக்கு சென்று திரும்  பிய போது இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் ஆனந்த குமார் உள்ளிட்ட 3 பேர்  அதே இடத்தில் பலியானார் கள். மேலும் 4 பேர் ஆபத்  தான நிலையில் ஜெயங் கொண்டம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மீன்சுருட்டி காவல்துறையினர் விசா ரித்து வருகின்றனர்.

;