tamilnadu

img

தமிழகத்தில் மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை,மார்ச் 18- மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்திலிருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டு உள்ளனர். மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக்கா லம் அடுத்த மாதம்  2 ஆம் தேதியுடன்  முடிவடைகிறது. இதில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்க ளாக இருக்கும் திருச்சி சிவா (திமுக), டி.கே.ரங்கராஜன் (சிபிஎம்), சசிகலா புஷ்பா , விஜிலா சத்யானந்த், மேட்டுப்பா ளையம் செல்வராஜ், முத்துக்கருப்பன் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்கால மும் நிறைவடைகிறது.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட அரசியல் கட்சிகளை சேர்ந்த 6 பேரும்,  சுயேட்சையாக மூவரும் வேட்பு மனு  தாக்கல் செய்திருந்தனர். இதில் சுயேட்  சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்  யப்பட்டன. இதில் திமுக, அதிமுக  சார்பில் மனு செய்த 6 பேரும் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான கே. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பில்  போட்டி யிட்ட திருச்சி என். சிவா, என்.ஆர். இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ்,  அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பா ளர்கள் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரி வித்துள்ளார்.