tamilnadu

தனியார் பள்ளிகளில் பயில 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு

சென்னை,ஜூன் 7- கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி களில் ஒரு லட்சத்து 21 ஆயிரம் இடங்கள் உள்ள  நிலையில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர்.இந்த ஆண்டு கட்டா யக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 81ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  நிர்ணயம் செய்யப் பட்டதை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப் பட்டிருக்கும் பள்ளிகளில் மட்டும் வெள்ளியன்று குலுக்கல் முறையில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்த ஆண்டு முதல் இந்த மாணவர் சேர்க்கை முழுவதும் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.