tamilnadu

img

வாணியம்பாடி அருகே விபத்தில் இளைஞர்கள் 3 பேர் பலி

ஆம்பூர், ஜன. 24 - திருப்பத்தூர் மாவட்டம், வாணியம் பாடியை அடுத்த வடச்சேரி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தமிழ்சுந்தர், சந்தோஷ் மற்றும் சின்னபள்ளி குப்பம் பகுதியை சேர்ந்த வேலு ஆகியோர் மேளம்  அடிக்கும் தொழில் செய்து வருகின்ற னர். 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வாணி யம்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்த னர். அப்போது கிரிசமுத்திரம் பகுதி  சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் சென்று கொண்டிருந்த போது  பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் தமிழ்சுந்தர் மற்றும்  வேலு ஆகியோர் சம்பவ இடத்திலே பலி யானார்கள். படுகாயமடைந்த சந்தோஷை மீட்ட வாணியம்பாடி காவல்துறையினர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்,  செல்லும் வழியிலேயே சந்தோஷ் பலியானார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி  இளைஞர்கள் 3 பேர் பலியான சம்பவம் அப்  பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யது. சம்பவம் குறித்து தாலுகா காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;