திருப்பூர், ஆக.19- எதிர்வரும் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு திருப்பூர் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவிகித ஒதுக் கீட்டின் கீழ் மாணவர் சேர்க் கைக்கு rte.tnschools.gov.in என்ற இணையவழியில் ஆக. 27 ஆம் தேதி முதல் செப். 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண் ணப்பம் பதிவேற்றம் செய் யப்பட்டவிபரம், பதிவு செய் யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறுஞ் செய்தியாக அளிக்கப்படும். மேலும், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், உதவித் தொடக் கக் கல்வி அலுவலர் ஆகி யோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல் லாமலும் விண்ணப்பங்க ளைப் பதிவேற்றம் செய் யலாம். இதில் நிர்ணயக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்ப டின் குலுக்கல் முறையில் அக். 1 ஆம் தேதியன்று அந் தந்த பள்ளிகளில் நடை பெறும். பெற்றோர்கள் சேர்க்க விரும்பும் பள்ளிக்குச் சென்று மேற்படி குழுக்களில் கலந்து கொள்ளலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரி வினரின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத் திறனா ளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண் ணப்பங்களுக்குக் குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.