திருநெல்வேலி, ஜூன் 15- நெல்லை கரையிருப்பில் வாலிபர் சங்க பொருளாளர் அசோக் படுகொலை செய் யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி கள் 6 பேர் சனிக்கிழமை நீதி பதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிராஜ் (19), முத்துப்பாண்டி (27), முருகன்(55), பாலு (48), மூக்கன் (45), கணே சன் (43) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை குற்றவாளி களை சனிக்கிழமை காலை நெல்லை தீண்டாமை வன் கொடுமை நீதிமன்றத்தில் நீதிபதி(பொ) அருள்முரு கன் முன்பு போலீசார் ஆஜர் படுத்தினர். நீதிபதி அருள் முருகன். குற்றவாளிகளை ஜூன் 28-ம் தேதி வரை 15 நாட் கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 6 பேரும் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.