சென்னை, மே 12- தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் 11ஆம் வகுப்பில் சில தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இறுதி பாடத்தின் போதும் கொரோனா பரவல் காரணமாக, பலர் தேர்வு எழுதவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒன்று முதல் ஒன்பது வரையி லான வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்ற தாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தியரி ஆகியவை ஜூன் 2 ஆம் தேதி காலை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கடைசி யாக நடந்த பாடத்தேர்வுகளை எழுத முடியா தவர்களுக்காக, ஜூன் 4 ஆம் தேதி காலை வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் தேர்வு நடக்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.