tamilnadu

img

இந்தோனேசியா ஜனாதிபதியாக ஜோகோ மீண்டும் தேர்வு

இந்தோனேசியாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 55 சதவிகித வாக்குகளை பெற்று ஜோகோ மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்தோனேசியாவில், ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் ஜோகோ விடோடா 55.5 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 விழுக்காடு வாக்குகள் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இந்த தேர்தலின்போது மோசடி நடந்திருப்பதால் தோல்வியை ஏற்க பிரபோவோ மறுத்துள்ளார். 

இதைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகளை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது குண்டு வெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பெயரில் 31 ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.