புதுதில்லி, ஏப்.8- இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5,274 பேராக அதிகரித் துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் மரணம் அடைந்துள்ள னர். இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண் ணிக்கை 5,274 பேராகவும் பலியானோர் எண்ணிக்கை 149 பேராகவும் அதிகரித்துள்ளதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 411 பேர் மீண்டுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,018 பேருக்கும் தமி ழகத்தில் 738 பேருக்கும், தில்லியில் 576 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.