tamilnadu

img

ஸ்பெயினில் தொடரும்  சோகம்...  24 மணி நேரத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலி

மாட்ரிட் 
கொரோனா வைரஸால் ஐரோப்பா கண்டத்தில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்பெயின் கடும் சேதாரத்தைச் சந்தித்து வருகிறது. அங்குத் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் கோரோனாவால் பலியாகி வருகின்றனர். 

இந்நிலையில் ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் இதுவரை மொத்தம் 14,555 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

;