1849 - போப் ஒன்பதாம் பயஸ், காயெட்டா நகருக்கு தப்பி ஓடியதையடுத்து, ரோமக் குடியரசு உருவானது. 1848இல் ஐரோப்பாவில் பரவலாக நடைபெற்றுக்கொண்டிருந்த புரட்சிகளின் ஒரு பகுதியாக, மக்களாட்சி, சமூகச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கோரிய போராட்டங்கள் ரோமிலும் நடைபெற்றன. இன, பண்பாட்டு அடிப்படையில் இத்தாலியப் பகுதிகளான பலவற்றை நீண்டகாலமாக ஆஸ்திரியா பிடித்து வைத்திருக்கும் பகுதிகளை விடுவிப்பதற்காக, அதன்மீது போர்தொடுக்கவும் கோரினர். இப்போராட்டங்களின்போது, 1848 நவம்பர் 15இல் போப் தலைமையிலான (ரோம்)அரசின் அமைச்சர் பெலக்ரினோ ராஸி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 25இல் போப் தப்பியோடினார். பண்டைய ரோமக் குடியரசைப்போன்று மூவராட்சி முறை கொண்ட ஒரு அரசமைப்புச் சட்டம் நவம்பர் 29இல் உரு வாக்கப்பட்டது. இந்த அரசமைப்புச் சட்டம், மரண தண்டனையை ஒழித்ததுடன் பல்வேறு (அக்காலத்திற்கு!) முற்போக்குக் கூறுகளைக் கொண்டிருந்தது.
முந்தைய (போப்) அரசு கத்தோலிக்க கிறித்தவத்தை யும், யூதத்தையும் மட்டுமே அனுமதித்திருந்த நிலையில், இந்த அரச மைப்புச் சட்டம், எந்த மதத்தையும் தடையின்றிப் பின்பற்றும் உரிமையை அளித்தது. அதற்குமுன் அனைவருக்கும் வாக்குரிமை இருந்திராத நிலையில், 21 வயதடைந்த அனைத்து ஆண் குடிமக்களுக்கும் வாக்க ளிக்க உரிமையளிக்கப்பட்டு நடத்தப்பட்ட தேர்தலை, கடவுளுக்கு விரோ தமானது என்று கூறிய போப், கத்தோலிக்கர்கள் வாக்களிக்கக்கூடாது என்று உத்தரவிட்டாலும், 50 சதவீதத்திற்கு அதிமானவர்கள் வாக்க ளித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அவையில், தொழிலதிபர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், பொறி யாளர்கள், வணிகர்கள், ராணுவத்தினர், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அதிகமிருந்தைக் கவனித்தால், அது வெறும் சமயத் தலைமைக்கெதி ரான போராக இன்றி, முதலாளித்துவப் பொருளாதார முறைக்கு மாறிக் கொண்டிருந்த சூழ்நிலையில், அதற்கான வர்க்கப் போர் என்பது புரியும். மாஜினி உள்ளிட்ட மூவரின் ஆட்சி அமைந்தவுடன், பிற கத்தோலிக்க நாடு களின் ராணுவ உதவியை நாடினார் போப். போப் தலைமையிலான அரசுகளை, தானே எதிர்த்துப் போராடியவரான லூயி நெப்போலியன் (பின்னாளில் மூன்றாம் நெப்போலியன்) பிரான்சின் அரசுத் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரே, தனக்கு வாக்களித்த கத்தோ லிக்கர்களுக்காக ரோமின்மீது படையெடுத்தாலும், கரிபால்டி-யின் பின்னால் திரண்டிருந்த படையைத் தோற்கடிப்பது எளிதாக இல்லை. ஜூலை 2இல் கரிபால்டி பின்வாங்க, ரோமைக் கைப்பற்றிய லூயி நெப்போலியன், பொதுமன்னிப்பு, சமயச்சார்பற்ற நிர்வாகம் உள்ளிட்ட வற்றைக் கட்டுப்பாடுகளாக விதித்ததைப் போப் ஏற்கவேண்டிதாயிற்று!
- அறிவுக்கடல்