tamilnadu

img

மே முதல் வாரத்தில் டிக்கெட் விற்பனை--ஒசாகா

உலகின் முதன்மை விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 32-வது சீசன் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் அடுத்த வருடம் (2020-ஜூலை) நடைபெறுகிறது.இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை மே 9-ஆம் தேதி துவங்கப்படவுள்ளது.டிக்கெட்டின் விலை குறைந்தபட்சமாக ரூ.1553 முதல் ரூ.1,86,465 வரை (இந்திய மதிப்பில்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ரசிகர்களைக் கவரும் ஆண்கள் 100 மீ., ஓட்டத்துக்கான டிக்கெட் விலை ரூ. 80,815 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பாரா ஒலிம்பிக்கிற்கான டிக்கெட் விற்பனை ஜூலை 24-ஆம் தேதி முதல் துவங்குகிறது. டோக்கியோவில் ஜூலை 24-ல் துவங்கி ஆகஸ்ட் 9 (2020) வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது.33 விதமான விளையாட்டுகளில் 339 போட்டிகள் நடத்தப்படவுள்ளது.206 நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 11,091 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் விற்பனை டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகம், ஜப்பான் லாட்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

;